DMK
வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடிக்கும் தேசிய கல்விக்கொள்கை வரைவை திரும்பப் பெறுக : தி.மு.க ஆய்வறிக்கை வெளியீடு!
தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடிப்படையில் தி.மு.க-வின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேசிய கல்விக் கொள்கையானது ஏழை மக்களுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வரைவு தேசியக் கல்விக் கொள்கை - இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உத்தரவாதத்திற்கு எதிரானது என்றும், வரைவு கல்வி கொள்கையானது ஒருதலை பட்சமாகவும், இந்தி மேலாதிக்கத்திற்கும் ஆதரவாக உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.கவின் விரிவான ஆய்வறிக்கையின் முடிவில் தேசியக் கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. வர்ணாசிரம தர்மத்தையும் - சாதி கட்டமைப்பையும் பாதுகாக்கவே மறைமுகமாக இந்தக் கல்விக் கொள்கை விரும்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான - மாணவர்களுக்கு எதிரான - மக்களுக்கு எதிரான, தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை தி.மு.கழகம் கடுமையாக எதிர்ப்பதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - விவரம் உள்ளே!
-
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதியை கட்ட தடை கோரி வழக்கு : அபாரதத்துடன் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
-
பீகாரில் இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு... - அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பு !
-
திமுக ஆட்சியில் குறைந்துவரும் கொலை வழக்குகள்... தினமலரே வெளியிட்ட ஆதாரம் - முரசொலி தலையங்கம் !
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!