DMK
வர்ணாசிரமத்தை தூக்கிப்பிடிக்கும் தேசிய கல்விக்கொள்கை வரைவை திரும்பப் பெறுக : தி.மு.க ஆய்வறிக்கை வெளியீடு!
தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடிப்படையில் தி.மு.க-வின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேசிய கல்விக் கொள்கையானது ஏழை மக்களுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வரைவு தேசியக் கல்விக் கொள்கை - இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உத்தரவாதத்திற்கு எதிரானது என்றும், வரைவு கல்வி கொள்கையானது ஒருதலை பட்சமாகவும், இந்தி மேலாதிக்கத்திற்கும் ஆதரவாக உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.கவின் விரிவான ஆய்வறிக்கையின் முடிவில் தேசியக் கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. வர்ணாசிரம தர்மத்தையும் - சாதி கட்டமைப்பையும் பாதுகாக்கவே மறைமுகமாக இந்தக் கல்விக் கொள்கை விரும்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான - மாணவர்களுக்கு எதிரான - மக்களுக்கு எதிரான, தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை தி.மு.கழகம் கடுமையாக எதிர்ப்பதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!