DMK
இந்தி பேசாத மாநிலங்களை ஒடுக்கும் முயற்சியில் பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருகிறது - தயாநிதி மாறன்!
சென்னை மண்ணடியில் தி.மு.க சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை தயாநிதி மாறன் எம்.பி தொடங்கி வைத்தார். கண் மருத்துவம், சர்க்கரை, பல், ரத்தப்பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துறைமுகம் எம்.எல்.ஏ சேகர்பாபு உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் எம்.பி, ''மத்தியில் மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.க அரசு, இந்தி பேசாத மாநிலங்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மாநில மொழிகள் உள்பட3 மொழிகளில் தபால் துறை தேர்வு எழுதலாம் என்ற இருந்ததை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என மாற்றி இருப்பது கண்டனத்துக்குரியது. சம்மந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து, மீண்டும் 3 மொழிகளில் தேர்வெழுதும் முறையை அமல்படுத்த வலியுறுத்துவோம்'' இவ்வாறு தெரிவித்தார்.
Also Read
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?