DMK
நான் கூறியது கலகக் குரல் அல்ல - கே.என்.நேரு விளக்கம் !
தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கண்டித்துதமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தன்னிலை விளக்கம் அளிக்க கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க தனித்து போட்டியிட வேண்டும் என்று நான் கூறியது கலகக் குரல் அல்ல. தி.மு.க அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதால் கூறினேன். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க வெளியேற வேண்டும் என்று நான் கூறவில்லை.
தி.மு.க தலைவருக்கு முழுமையாக கட்டுப்பட்ட ஒரு மாவட்ட செயலாளர் நான். ஒரு மாவட்டச் செயலாளராக எனது கருத்தை சொன்னேன். ஒரு தொண்டன் என்ற முறையிலேயே எனது கருத்தை தெரிவித்தேன். கூட்டணி குறித்து மாவட்டச் செயலாளராகிய நான் எப்படி முடிவு எடுக்க முடியும். தி.மு.க தலைவர்தான் முடிவு எடுப்பார். தன்னிலை விளக்கத்திற்காக மட்டுமே செய்தியாளர்களை சந்தித்தேன் '' என்று தெரிவித்தார்.
Also Read
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!