DMK
நான் கூறியது கலகக் குரல் அல்ல - கே.என்.நேரு விளக்கம் !
தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கண்டித்துதமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தன்னிலை விளக்கம் அளிக்க கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க தனித்து போட்டியிட வேண்டும் என்று நான் கூறியது கலகக் குரல் அல்ல. தி.மு.க அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதால் கூறினேன். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க வெளியேற வேண்டும் என்று நான் கூறவில்லை.
தி.மு.க தலைவருக்கு முழுமையாக கட்டுப்பட்ட ஒரு மாவட்ட செயலாளர் நான். ஒரு மாவட்டச் செயலாளராக எனது கருத்தை சொன்னேன். ஒரு தொண்டன் என்ற முறையிலேயே எனது கருத்தை தெரிவித்தேன். கூட்டணி குறித்து மாவட்டச் செயலாளராகிய நான் எப்படி முடிவு எடுக்க முடியும். தி.மு.க தலைவர்தான் முடிவு எடுப்பார். தன்னிலை விளக்கத்திற்காக மட்டுமே செய்தியாளர்களை சந்தித்தேன் '' என்று தெரிவித்தார்.
Also Read
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!
-
அரசுப்பள்ளி குழந்தைகளிடம் கேள்வி.. அடங்காத அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. குவியும் கண்டனங்கள்!
-
நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!
-
7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!