DMK
சூலூர் இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்தார் பொங்கலூர் பழனிச்சாமி!
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மே 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போற்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி அவர்கள், வேட்புமனுவை சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் தாக்கல் செய்தார்.
அப்போது, தொகுதிப் பொறுப்பாளரும் கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர். சூலூர் தொகுதியில் பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற தி.மு.க பிரமுகர்களும், தொண்டர்களும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மே 5,6-ம் தேதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை ஆற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!