DMK
சூலூர் இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்தார் பொங்கலூர் பழனிச்சாமி!
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மே 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போற்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி அவர்கள், வேட்புமனுவை சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் தாக்கல் செய்தார்.
அப்போது, தொகுதிப் பொறுப்பாளரும் கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எ.வ.வேலு எம்.எல்.ஏ., உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர். சூலூர் தொகுதியில் பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற தி.மு.க பிரமுகர்களும், தொண்டர்களும் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மே 5,6-ம் தேதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை ஆற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!