Cinema
படப்பிடிப்பின் போது காலில் காயம்.. கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வரும் பிரபல தமிழ் சினிமா நடிகர்!
தமிழ் சினிமாவில் 1995ம் ஆண்டு வெளியான 'முறை மாப்பிள்ளை' படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். இவர் பல படங்கள் நடித்து இருந்தாலும் 'என்னை அறிந்தால்' படத்தின் 'விக்டர்' கதாபாத்திரம் தான் இவருக்குப் பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
பின்னர் 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'தடம்' போன்ற அடுத்தடுத்த மூன்று படங்களும் இவருக்கு வெற்றியைக் கொடுத்தது. இதையடுத்து கதாநாயகன் மற்றும் குணச்சித்திர நடிகர் என இரண்டிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இந்நிலையில் 'மதராசப்பட்டினம்', 'செய்வ திருமகன்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த ஏ.எல்.விஜய் நடிகர் அருண் விஜயை வைத்து அச்சம் என்பது இல்லையே என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி ஒன்றில் நடித்தபோது நடிகர் அருண் விஜய்க்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்காக, கேரளா திருச்சூரில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகிச்சை பெறும் புகைப்படங்களோடு இதனை தெரிவித்துள்ளார். அதில், "நான்காவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறேன். இப்போது நன்றாக உணர்கிறேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்" எனவும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!