Cinema
பிரபல நடிகையை ஷட்டரை மூடி கடைக்குள் அடைத்துவைத்த ஷோரூம் ஊழியர்கள்.. பயத்தில் அழுததாக நடிகை பேட்டி !
பல மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அன்னா ரேஷ்மா ராஜன். இவர் தனது அம்மாவின் செல்போனிலுள்ள சிம்கார்ட்டில் பிரச்சனை ஏற்பட்டதால் வேறு டூப்ளிகேட் சிம் கார்டு வாங்க ஆலுவா பகுதியில் உள்ள நிறுவனத்தின் ஷோரூமுக்கு சென்றுள்ளார்.
பிரபலமானவர் என்பதை பிறருக்கு ஆதாயம் தெரியக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து, ஷால் கொண்டு தலையில் மூடிக்கொண்டு அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள 25 வயதுடைய பெண் மேலாளர் இவரிடம் முறையாக பதில் கூறாமல் இருந்துள்ளார். இதனால் அவர் குறித்து புகார் அளிக்க அவரை புகைப்படம் எடுத்துள்ளார்.
தன்னை குறித்து புகார் கொடுக்க புகைப்படம் எடுத்ததை உணர்ந்த அந்த மேலாளர் உடனடியாக அங்கிருந்த ஊழியர்களை அழைத்து நிறுவனரின் ஷட்டர்களை மூடுமாறு கூறியுள்ளார். அதன்படி ஊழியர்கள் ஷோரூமின் ஷட்டரை மூடி ரேஷ்மா ராஜனின் கையை பிடித்து இழுத்து அங்கிருந்த சேரில் அமரவைத்துள்ளனர். இதில் ரேஷ்மா ராஜனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து போலிஸாரை தொடர்புகொள்ள முயன்ற ரேஷ்மா ராஜன் அது முடியாததால் தனது தந்தைக்கு நெருக்கமானவர்களிடம் இது தொடர்பாக போனில் அழைத்து கூறியுள்ளார். அதன்படி போலிஸுக்கு தகவல் தெரிவித்த அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.
அதன்பின்னர் போலிஸ் வந்த பின்னர் ஷோரூமின் ஷட்டர் திறக்கப்பட்டு ரேஷ்மா ராஜன் வெளியே அழைத்துவரப்பட்டுள்ளார். இது குறித்து ஆலுவா காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேசிய ரேஷ்மா ராஜன், "போலீஸ் வரும்வரை இங்கிருந்து வெளியே போக மாட்டேன்' எனக் கூறி வருத்தத்தில் அழுதுவிட்டேன். அதற்கு என்னிடம் போட்டோவை டெலிட் செய்யும்படி சொன்னார்கள். நானும் போட்டோவை டெலிட் செய்துவிட்டேன்.
காவல் நிலையத்துக்கு வந்த ஷோரூம் ஊழியர்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்டனர். ஒருவரை வேலையைவிட்டு நீக்கவைப்பது எளிது. ஆனால் அவருக்கு வேலை வாங்கிக் கொடுப்பது கடினம் என்பதால், நான் அந்தப் பெண் மேலாளரை மன்னித்து விட்டுவிட்டேன்." என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!