Cinema
குடியரசுத் தலைவரிடம் இருந்து சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா: முழு படத்தொகுப்பு!
68வது தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சூரரைப்போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. சிறந்த படம் சூரரைப்போற்று, சிறந்த நடிகர் சூர்யா, சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த இசை ஜி.வி.பிரகாஷ்குமார், சிறந்த திரைக்கதை சுதா கொங்கரா ஆகிய 5 பிரிவில் விருதுகள் அறிவிக்கப்பட்டது.
அதேபோல் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்குச் சிறந்த படம், சிறந்த எடிட்டர், சிறந்த துணை நடிகை என 3 விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் மண்டேலா படமும் சிறந்த வசனம், சிறந்த அறிமுகம் இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று 68 வது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூரரைப்போற்று படத்திற்காகச் சிறந்த விருதைப் பெற்றார் நடிகர் சூர்யா.
அதேபோல் சிறந்த நடிகை அபர்ணா பாலமுரளி, சிறந்த இசை ஜி.வி.பிரகாஷ் குமார், சிறந்த திரைக்கதை சுதா கொங்கரா ஆகியோர் தேசிய விருதைப் பெற்றனர்.
மேலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்காக இயக்குநர் வசந்த், ஸ்ரீகர்பிராசத், லட்சுமிப்பிரியா சந்திரமவுலி ஆகியோருக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. அதேபோல் மண்டேலா திரைப்படத்திற்காகத் தேசிய விருது இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.
Also Read
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!
-
பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!
-
குற்றவாளிகளுக்கு தரப்படும் ஜாமீன், முதல்வர்களுக்கு மறுக்கப்படுகிறது : பா.ஜ.க.வின் அடக்குமுறை அரசியல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் மனங்களில் தாண்டவமாடும் மகிழ்ச்சி” : கி.வீரமணி வாழ்த்து!
-
”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!