Cinema
நடிகர் சல்மான் கானுக்கு வந்த கொலை மிரட்டல்.. பஞ்சாப் கும்பலுக்கு பயந்து துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி !
பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாடகரான சித்து மூஸ் வாலா அண்மையில் கொல்லப்பட்டார். இவருக்கும் பிஸ்னோய் கும்பலுக்கும் இருந்த பகை காரணமாக அந்த கும்பல் இவரை கொன்றது.
பாடகர் சித்து இறந்த சில நாட்களிலே, பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு மர்ம கும்பல் கொலை மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், "சித்து மூஸ் வாலாவுக்கு ஏற்பட்ட கதி தான் உங்களுக்கும்" என்று இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்தது.
பின்னர் இது குறித்து சல்மான் கான், காவல்துறையில் புகார் அளித்தன் பேரில், இவர் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இவை ஒரு புறம் இருக்க, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, கடந்த ஜூலை 22-ம் தேதி மும்பை கமிஷனர் அலுவலகத்தில் நேரில் சென்று துப்பாக்கிக்கு லைசென்ஸ் வேண்டி விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அவர் பயன்படுத்தி வரும் காரானது குண்டுகள் துளைக்காதவாறு புல்லட் ப்ரூப் கண்ணாடிகளைக் கொண்டு பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சென்னையில் நீர் மெட்ரோ திட்டம்... முதற்கட்ட பணிகள் தொடக்கம் : செயல்படுத்தப்படும் 53 கி.மீ நீள பாதை என்ன?
-
மழைநீரைச் சேமிப்பதில் தீவிரம் காட்டும் சென்னை மாநகராட்சி... 4 ஆண்டுகளில் 70 குளங்கள் புனரமைப்பு !
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!