Representational image
Cinema
“பிடிச்ச நடிகரோட படம் சரியா போகல” : விரக்தியில் விபரீத முடிவெடுத்த ரசிகர் - திரையுலகில் அதிர்ச்சி!
பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், ஆந்திரா, தெலங்கானா தவிர பிற மொழிகளி்ல் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பைப் பெறவில்லை.
‘ராதே ஷியாம்’ படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்காத நிலையில் பிரபாஸ் ரசிகர் ஒருவர் தற்கொலை கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூலைச் சேர்ந்தவர் முத்யாலா ரவி தேஜா (24). வெல்டிங் தொழிலாளியான இவர் பிரபாசின் தீவிர ரசிகர் எனக் கூறப்படுகிறது. ராதே ஷியாம் படம் பார்த்த இவருக்கு படம் பிடிக்கவில்லை, படத்திற்கு கிடைத்த வரவேற்பும் அவருக்கு ஏமாற்றமாக இருந்திருக்கிறது.
இதுகுறித்து தனது தாயிடமும், நண்பரிடமும் புலம்பிய அவர் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளார். இதையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
‘ராதே ஷியாம்’ திரைப்படத்தால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக.. அண்ணா பிறந்தநாளில் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
-
கிருஷ்ணகிரியில் 2 லட்ச பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!