Cinema
’அண்ணாத்த’ திரையிடப்பட்ட தியேட்டரில் பரபரப்பு; ஃபால் சீலிங் விழுந்ததால் அலறியடித்து ஓடிய ரசிகர்கள்!
தீப ஒளியை முன்னிட்டு திரை விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ’அண்ணாத்த’ படம் இன்று உலகெங்கும் வெளியாகியுள்ளது.
அதன்படி புதுச்சேரியில் 14 திரையரங்குகளில் ரஜினியின் அண்ணாத்த படம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை முதல் நாளிலேயே பார்க்க ஆர்வம் கொண்ட ரசிகர்கள் திரையரங்குகளில் அதிகாலை முதல் குவிந்தனர்.
முதல் காட்சி காலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. ஒவ்வொரு காட்சிக்கும் வரும் ரசிகர்கள் திரையரங்கு வெளியே பட்டாசு வெடித்து மேளம் தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அவ்வகையில் அண்ணாத்த படம் திரையிடப்பட்ட அண்ணா சாலையில் உள்ள ராஜா திரையரங்கில் காலை 11.15 திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தியேட்டரின் ஒரு மூளையில் ஃபால் சீலிங் விழுந்ததால் ரசிகர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.
ஆனால் நல்வாய்ப்பாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. படம் முடியும் தருவாயில் இருந்ததால் உடைந்த இடத்தை தாண்டி நின்று கொண்டு ரசிகர்கள் படம் பார்த்து சென்றனர்.
சில நிமிடங்களில் படம் முடிந்ததும் ரசிகர்கள் அனைவரும் வெளியே வந்து விட்டனர். இதனையடுத்து சுத்தம் செய்து விட்டு கட்டிடத்தின் தன்மையை உறுதி செய்த பின் அடுத்த காட்சி திரையிடப்பட்டது.
Also Read
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!