Cinema
“என்னால் தாங்க முடியவில்லை..” : புனித் ராஜ்குமாரின் மறைவைத் தாங்க முடியாமல் விபரீத முடிவெடுத்த ரசிகர்!
கன்னட உலகின் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பால் காலமானார். இவரின் இறப்புச் செய்தியை அறிந்து கன்னட திரையுலகமே துக்கத்தில் மூழ்கியுள்ளது.
மேலும் புனித் ராஜ்குமாரின் மறைவு அவரது ரசிர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டதை அறிந்த உடனே அவரது ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.
நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புனித் ராஜ்குமாரின் உடல்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக புனித் ராஜ்குமாரின் உடல் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தின் பெல்காம் பகுதியில் நடிகர் புனித் ராஜ்குமார் மறைவைத் தாங்க முடியாத விரக்தியில் ராகுல் என்ற அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். அதேபோல புனித் ராஜ்குமார் மறைவு செய்தி அறிந்து மாரடைப்பால் முனியப்பன், பரசுராம் ஆகிய இரண்டு ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!