Cinema
“விலைமதிப்புமிக்க பொருட்கள் சேதம்” - பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது இளையராஜா போலிஸில் புகார்!
பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைத்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தன்னை இடத்தைக் காலி செய்யச் சொல்லி தொல்லை செய்வதாக ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசைக் குறிப்புகள், மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்களைச் சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது தற்போது புகார் தெரிவித்துள்ளார் இளையராஜா.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சட்டத்தை மீறி ஸ்டூடியோ உரிமையாளர் செயல்பட்டிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் அளித்த அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனக்கு ஒதுக்கப்பட்ட அறையின் சாவி தன்னிடம் இருக்கும்போது, அறை உடைக்கப்பட்டு இசைக்குறிப்புகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாகவும் அந்தப் புகாரில் இளையராஜா தெரிவித்துள்ளார்.
Also Read
-
சோபா மாடல் ஆட்சியில் போலீசாராலும் பாதுகாப்பு இல்லை போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை : உதயநிதி கடும் கண்டனம்
-
ரூ. 9 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகி : பணத்தை இழந்த முதியவர் விபரீத முடிவு - காவல்துறையின் அலட்சியம்!
-
சென்னையில் பயங்கரம் : நடைபயிற்சி சென்ற 60 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்!
-
“உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் மே 31-க்குள் கருத்துகளை பதிவு செய்யவும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
“ஒவ்வொரு நாளும் ‘விஜய்’யின் அரிதாரம் கலைந்து கொண்டே வருகிறது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!