Cinema
கொரோனா தடுப்பு நடவடிக்கை: நடிகர் விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி!
கொரொனா தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 19 ஆயிரத்தை கடந்துள்ளது பாதிப்பு எண்ணிக்கை. அறநூற்றுக்கும் மேலானோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவி அளிக்கக் கோரி மத்திய மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதன்படி, பிரதமர் மற்றும் தத்தம் மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு சினிமா மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 1 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், கேரள அரசுக்கு ரூ.10 லட்சமும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.5 லட்சமும் அளித்துள்ளார்.
மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா பணிகள் ஏதும் நடத்தப்படாமல் இருப்பதால், தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களின் நலன்களுக்காக ஃபெப்சிக்கு ரூ.25 லட்சமும் நிதியளித்துள்ளார் நடிகர் விஜய்.
நடிகர் விஜயின் நிவாரண நிதி அறிவிப்பு செய்திய் வெளியானதை அடுத்து, ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் #RealHeroThalapathyVIJAY என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்- திறந்து வைத்த CM MK Stalin
-
ரூ.150 கோடி முதலீடு - எல்காட் மற்றும் ஹெச்சிஎல்டெக் நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!