Cinema
‘என்னை ஏமாற்றிவிட்டார்’- சினிமா இயக்குநர் மீது ‘அசுரன்’ பட நடிகை போலிஸ் டி.ஜி.பி.,யிடம் பரபரப்பு புகார்!
மலையாள திரைப்பட உலகின் பிரபல நடிகை மஞ்சுவாரியர். சமீபத்தில் நடிகர் தனுஷ் உடன் ஜோடியாக ‘அசுரன்’ படத்தில் நடித்திருந்தார். இவர் நேற்று காலை திருவனந்தபுரம் டிஜிபியை சந்தித்து தனது கையால் எழுதப்பட்ட புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகாரில் பிரபல இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். இந்த புகாரை உறுதிப்படுத்த சில டிஜிட்டல் ஆதாரங்களையும் அவர் அளித்துள்ளார்.
மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து கடந்த 2018ம் ஆண்டு ஒடியன் என்ற திரைப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார். இந்த படத்தை ஸ்ரீகுமார் மேனன் இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை.
முன்னதாக, ஸ்ரீகுமார் மேனனும் வாரியரும் விளம்பரப் படங்களில் இணைந்து பணியாற்றினர். இந்த நட்புதான், பின்னர் மோகன்லால் நடித்த அதிக பட்ஜெட் திரைப்படமான 'ஒடியன்' படத்தில் ஒன்றாக வேலை செய்ய வைத்தது.
படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆகவில்லை. இதனைத் தொடர்ந்து மஞ்சுவாரியர் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் வெளிவரத் தொடங்கின. ஸ்ரீகுமார் மேனன் மஞ்சுவாரியரின் தனிப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு அவரை மிரட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக, வயநாட்டில் ஒரு பழங்குடி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டுவதாக உறுதியளித்து அது நிறைவேற்றப்படாததால் மோசடி செய்ததாகவும் மஞ்சு வாரியர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவருக்கு எதிராக வயநாடு சட்ட சேவை ஆணையம் ஒரு நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சட்ட சேவை ஆணையத்தின் முன் ஆஜராகும்படி பணிக்கப்பட்டார்.
1.88 கோடி ரூபாய் செலவழித்து 57 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப்படும் என்று மஞ்சு வாரியர் அறக்கட்டளை பனமரம் பஞ்சாயத்தில் உள்ள பரகுனியில் பனியா சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தது.
இது தொடர்பான கடிதம் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஏ.கே.பாலன் மற்றும் பனமரம் கிராம பஞ்சாயத்துக்கு ஜனவரி 20, 2017 அன்று வழங்கப்பட்டது. பின்னர், எஸ்சி / எஸ்டி துறை இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், வீட்டுத்திட்டத்தை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பழங்குடியினர் குற்றம் சாட்டியிருந்தனர். மாநிலத்தை அழித்த 2018 வெள்ளத்தில், இந்த வட்டாரத்தில் பெரிய அழிவு ஏற்பட்டது.
அறக்கட்டளை உதவி உறுதியளித்ததால், அரசாங்க அதிகாரிகள் யாரும் மறுவாழ்வுக்கு எந்த உதவியும் உதவியும் வழங்க முன்வரவில்லை. ஆனால் அறக்கட்டளை எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது இப்படி இருக்க, மஞ்சு வாரியரின் புகாருக்கு பதிலளித்துள்ள ஸ்ரீகுமார் மேனன், "நான் சட்டத்தின் வழக்கமான குடிமகன். மஞ்சு வாரியர் அளித்த புகாரைப் பற்றி ஊடகங்களின் வாயிலாக மட்டுமே கேள்விப்பட்டேன். விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைத்து அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துவேன்" என்று வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீகுமார் மேனன் மீதான மஞ்சுவாரியர் புகார் குறித்து தனிக்குழு அமைத்து விசாரிக்க கேரளா போலிஸ் முடிவு செய்துள்ளது.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!