Cinema
ஏஞ்சலினா ஜோலிக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்!
நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிகமாக ஹிந்தி மொழிப் படங்களில் ஆர்வம் செலுத்திய இவர் அங்கு முன்னணி நாயகியாக விளங்குகிறார்.
இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சிறிய இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் படம் Maleficent : Mistress of Evil. இந்த படத்தை இந்திய மொழிகளில் டப் செய்து வெளியிட முடிவு செய்த படக்குழு அதற்கான வேலைகளை இந்தியாவில் துவங்கியுள்ளது.
இதில் இந்தி மொழியில் ஏஞ்சலினாவின் கதாபாத்திரத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் குரல் கொடுக்க உள்ளார். இதனால் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளதால் இங்கும் ஒரு முக்கிய நடிகையை ஏஞ்சலினாவுக்கு டப்பிங் பேச வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. விரைவில் அந்த உச்ச நடிகை யார் என்ற தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!