Cinema
ஏஞ்சலினா ஜோலிக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்!
நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிகமாக ஹிந்தி மொழிப் படங்களில் ஆர்வம் செலுத்திய இவர் அங்கு முன்னணி நாயகியாக விளங்குகிறார்.
இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சிறிய இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் படம் Maleficent : Mistress of Evil. இந்த படத்தை இந்திய மொழிகளில் டப் செய்து வெளியிட முடிவு செய்த படக்குழு அதற்கான வேலைகளை இந்தியாவில் துவங்கியுள்ளது.
இதில் இந்தி மொழியில் ஏஞ்சலினாவின் கதாபாத்திரத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் குரல் கொடுக்க உள்ளார். இதனால் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளதால் இங்கும் ஒரு முக்கிய நடிகையை ஏஞ்சலினாவுக்கு டப்பிங் பேச வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. விரைவில் அந்த உச்ச நடிகை யார் என்ற தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!