Cinema
ஏஞ்சலினா ஜோலிக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்!
நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிகமாக ஹிந்தி மொழிப் படங்களில் ஆர்வம் செலுத்திய இவர் அங்கு முன்னணி நாயகியாக விளங்குகிறார்.
இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சிறிய இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் படம் Maleficent : Mistress of Evil. இந்த படத்தை இந்திய மொழிகளில் டப் செய்து வெளியிட முடிவு செய்த படக்குழு அதற்கான வேலைகளை இந்தியாவில் துவங்கியுள்ளது.
இதில் இந்தி மொழியில் ஏஞ்சலினாவின் கதாபாத்திரத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் குரல் கொடுக்க உள்ளார். இதனால் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளதால் இங்கும் ஒரு முக்கிய நடிகையை ஏஞ்சலினாவுக்கு டப்பிங் பேச வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. விரைவில் அந்த உச்ச நடிகை யார் என்ற தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!
-
“மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்கள்...” : பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் !
-
சிவகங்கையில் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலை : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!