Cinema
ஏஞ்சலினா ஜோலிக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்!
நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ், இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிகமாக ஹிந்தி மொழிப் படங்களில் ஆர்வம் செலுத்திய இவர் அங்கு முன்னணி நாயகியாக விளங்குகிறார்.
இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி சிறிய இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் படம் Maleficent : Mistress of Evil. இந்த படத்தை இந்திய மொழிகளில் டப் செய்து வெளியிட முடிவு செய்த படக்குழு அதற்கான வேலைகளை இந்தியாவில் துவங்கியுள்ளது.
இதில் இந்தி மொழியில் ஏஞ்சலினாவின் கதாபாத்திரத்திற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் குரல் கொடுக்க உள்ளார். இதனால் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளதால் இங்கும் ஒரு முக்கிய நடிகையை ஏஞ்சலினாவுக்கு டப்பிங் பேச வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. விரைவில் அந்த உச்ச நடிகை யார் என்ற தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள்! : இம்மி அளவும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்!
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!