Cinema
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட கல்லி பாய் திரைப்படம்!
ஸோயா அக்தர் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியான இந்தி திரைப்படம் 'கல்லி பாய்'. ரன்வீர் சிங், அலியா பட், சித்தாந்த் சதுர்வேதி, கல்கி கோச்லின் எனப் பலரும் நடித்திருந்தனர்.இந்தப் படம் சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டுகளைப் பெற்றதோடு, வசூல் ரீதியிலும் வெற்றியடைந்தது.
பெர்லின் திரைவிழாவிலும் திரையிடப்பட்ட இந்தப் படம், தற்போது இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்காக 28 இந்தியப் படங்கள் போட்டியிட்டன. சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு, வட சென்னை ஆகிய மூன்று தமிழ்ப் படங்களும் போட்டியிட்டன. இந்நிலையில் 'கல்லி பாய்' தேர்வு செய்யப்படதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஆஸ்கர் விருதை இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் பெறவில்லை என்ற நிலையை 'கல்லி பாய்' மாற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read
- 
	    
	      
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
 - 
	    
	      
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!
 - 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
 - 
	    
	      
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
 - 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!