Cinema
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட கல்லி பாய் திரைப்படம்!
ஸோயா அக்தர் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியான இந்தி திரைப்படம் 'கல்லி பாய்'. ரன்வீர் சிங், அலியா பட், சித்தாந்த் சதுர்வேதி, கல்கி கோச்லின் எனப் பலரும் நடித்திருந்தனர்.இந்தப் படம் சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டுகளைப் பெற்றதோடு, வசூல் ரீதியிலும் வெற்றியடைந்தது.
பெர்லின் திரைவிழாவிலும் திரையிடப்பட்ட இந்தப் படம், தற்போது இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்காக 28 இந்தியப் படங்கள் போட்டியிட்டன. சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு, வட சென்னை ஆகிய மூன்று தமிழ்ப் படங்களும் போட்டியிட்டன. இந்நிலையில் 'கல்லி பாய்' தேர்வு செய்யப்படதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஆஸ்கர் விருதை இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் பெறவில்லை என்ற நிலையை 'கல்லி பாய்' மாற்றுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!