Cinema
முதலில் பிகில்... அடுத்த அப்டேட்களை நானே சொல்கிறேன்.. வதந்திகளை நம்ப வேண்டாம் - விஜய் 64 இயக்குநர்
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் 'பிகில்'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதற்கு முன்பு லோகேஷ் இயக்கிய மாநகரம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதனையடுத்து கார்த்தியை வைத்து கைதி என்கிற படத்தை லோகேஷ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.
இதற்கு அடுத்ததாக விஜய் நடிக்க, எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவாளராகவும், ஃபிலோமின் ராஜ் எடிட்டராகவும், ஸ்டன்ட் சில்வா ஃபைட் மாஸ்டராகவும் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், 2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘விஜய் 64’ திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ம் தேதி துவங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாகவும், படத்தின் டைட்டில் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வலம் வந்துகொண்டிருந்தன. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் இன்னும் முடிவாகவில்லை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய லோகேஷ் கனகராஜ், ''விஜய்யின் 64 படத்திற்கான டைட்டில் இன்னும் முடிவாகவில்லை. அதனால் டைட்டில் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். விஜய்யின் பிகில் படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன் வெற்றியை கொண்டாடத் தயாராகுங்கள்'' என தெரிவித்துள்ளார்.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!