Cinema
மாநாடு படத்தில் மீண்டும் இணைய பச்சைக் கொடி காட்டிய சிம்பு? - கைவிடப்படுகிறது மகா மாநாடு? புதிய அப்டேட்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த படம் மாநாடு. அரசியலை மையமாக கொண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியதும் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது.
ஆனால் பல மாதங்களாகவே படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் தொடங்கப்படாமல் இருந்ததால் திடீரென சிம்பு நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
மேலும், மாநாடு படம் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலேயே உருவாகும் என்றும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, மாநாடு படம் கைவிடப்பட்டதால் சமீபத்தில் மகா மாநாடு என்ற படத்தை தானே 125 கோடி செலவில் தயாரித்து 5 மொழிகளில் இயக்கி சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று பிறந்தநாளை காணும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது, மாநாடு படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சிம்பு தெரிவித்ததாகவும், விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதகாவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!