Cinema
மாநாடு படத்தில் மீண்டும் இணைய பச்சைக் கொடி காட்டிய சிம்பு? - கைவிடப்படுகிறது மகா மாநாடு? புதிய அப்டேட்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த படம் மாநாடு. அரசியலை மையமாக கொண்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியதும் சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவியது.
ஆனால் பல மாதங்களாகவே படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் தொடங்கப்படாமல் இருந்ததால் திடீரென சிம்பு நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
மேலும், மாநாடு படம் வெங்கட் பிரபுவின் இயக்கத்திலேயே உருவாகும் என்றும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, மாநாடு படம் கைவிடப்பட்டதால் சமீபத்தில் மகா மாநாடு என்ற படத்தை தானே 125 கோடி செலவில் தயாரித்து 5 மொழிகளில் இயக்கி சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று பிறந்தநாளை காணும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது, மாநாடு படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சிம்பு தெரிவித்ததாகவும், விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதகாவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!