Cinema
ஜோதிகா நடித்து வரும் புதிய படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் நடிகர் சூர்யா...
திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி கொடுத்த நாயகி ஜோதிகா தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியதுவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக அவரின் நடிப்பில் வெளியான ‘செக்க சிவந்த வானம்’, ‘காற்றின் மொழி’ போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது ஜோதிகா,’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதற்கிடையே கணவர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கு ஒரு படம் நடிக்க ஒப்பந்தமான ஜோதிகா 35 நாட்களில் அந்த படத்தின் ஷூட்டிங் வேலைகளை முடித்துக் கொடுத்திருக்கிறார்.
ஜோதிகாவுடன் சேர்ந்து ரேவதி நடித்திருந்த இந்த படமும் பெண்கள் முன்னேற்றதை மையப்படுத்திய படமாக உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் முடிவடைவதை ஒட்டி இறுதிநாள் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சூர்யா இயக்குனருக்கும் படக்குழுவுக்கும் நன்றி கூறியுள்ளார்.
Also Read
-
மாற்றம் என்று தவெகவினர் கூறியது : மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு கீதாஜீவன் கண்டனம்!
-
விஜயின் திடீர் கரூர் பயணம் எதற்காக? : உண்மையை உரக்கச் சொன்ன முரசொலி!
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!