Cinema
ஜோதிகா நடித்து வரும் புதிய படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் நடிகர் சூர்யா...
திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு ரீ-எண்ட்ரி கொடுத்த நாயகி ஜோதிகா தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியதுவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக அவரின் நடிப்பில் வெளியான ‘செக்க சிவந்த வானம்’, ‘காற்றின் மொழி’ போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது ஜோதிகா,’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதற்கிடையே கணவர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கு ஒரு படம் நடிக்க ஒப்பந்தமான ஜோதிகா 35 நாட்களில் அந்த படத்தின் ஷூட்டிங் வேலைகளை முடித்துக் கொடுத்திருக்கிறார்.
ஜோதிகாவுடன் சேர்ந்து ரேவதி நடித்திருந்த இந்த படமும் பெண்கள் முன்னேற்றதை மையப்படுத்திய படமாக உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் முடிவடைவதை ஒட்டி இறுதிநாள் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சூர்யா இயக்குனருக்கும் படக்குழுவுக்கும் நன்றி கூறியுள்ளார்.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!